விருந்தாவன் நகரத்தில் உள்ள மற்றொரு முக்கியமான கோயில் இந்த கோபேஷ்வர் மஹாதேவ் கோயில் ஆகும். இது கிருஷ்ணரோடு நெருங்கிய தொடர்புடைய சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
புராணக்கதையின்படி, சிவன் ஒருமுறை கிருஷ்ணர் கோபியரோடு புரியும் ராசலீலைகளை பார்க்க விரும்பியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர் ஆண் என்பதால் ராசலீலை நடைபெறும் நந்தவனத்துக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.
எனவே அவர் ஒரு பெண்ணாக உருமாறி நந்தவனத்துக்குள் நுழைந்து ராசலீலைகளை கண்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தின் அடையாளமாக இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு பெண்ணுடை அணிவிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications