மதுரா அருகில் அமைந்திருக்கும் கோவர்தன் புகழ்பெற்ற இந்துமத புண்ணியஸ்தலம் ஆகும். கிருஷ்ணரைப் பற்றிய பல புராணங்களுடன் தொடர்புடைய இவ்விடத்தின் சிகரம் கிருஷ்ணலீலையின் ஒருபகுதியாக இருக்கும் விருப்பத்தில் வானத்திலிருந்து வந்ததாகக் கூறுவர். மேலும் கடுமையான மழை பெய்த ஒரு சமயத்தில் பகவான் கிருஷ்ணர் இந்த மலையை தன் கைகளால் தூக்கி வ்ராஜ் மக்களை மழையில் இருந்து காத்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலே சொன்னதைப் போல் புகழ்பெற்ற புண்ணியஸ்தலமான இவ்விடத்தில் கோவர்தன பரிகாரம் செய்பவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என நம்பப்படுகிறது, கிருஷ்ணரின் மிகப்பெரிய சிலை இப்பகுதியின் தெய்வீக சூழ்நிலைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
கோவர்தன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்
கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஹர் தேவாஜி கோவில் முக்கியமான சுற்றுலா தளமாகும். கிருஷ்ணரின் வாழ்க்கையை வர்ணிக்கும் வண்ணம் ராதை மற்றும் கிருஷ்ணரின் அழகிய சிலைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ராதா குண்டம் என்றழைக்கப்படும் இடத்தில் ராதையும் கிருஷ்ணரும் கோபியர்களை சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. கடவுள் கிருஷ்ணருக்காக கோபியர்கள் காத்திருந்த புண்ணிய நீர்நிலையான குசும் சரோவரும் இங்கு அமைந்துள்ளது.
கோவர்தனுக்கு பயணப்பட சிறந்த பருவம்
கோவர்தனுக்குப் பயணப்பட சிறந்த நேரமாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் கருதப்படுகிறது. இம்மாதங்களில் நிலவும் பருவநிலை மிதமாகவும், ரம்மியமாகவும் இருப்பதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு குவிகிறார்கள்.
கோவர்தனுக்கு எப்படி பயணப்படலாம்
கோவர்தன் செல்ல நிறைய சாலை மற்றும் ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது