கலவையால் கட்டப்பட்ட இத்தொட்டி ராஜா பகவான் தாஸ் மற்றும் ராஜா மான் சிங் ஆகியோரால் கட்டப்பட்டது. மான்சி என்றால் புத்தி என்ற பொருளில் அமைந்துள்ள இவ்விடம் கோவர்தன் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
புராணத்தின்படி கிருஷ்ணரின் வளர்ப்புப் பெற்றோரான நந்த் மற்றும் யசோதை ஆகியோர் கங்கையில் குளிக்க ஆசைப்பட்டபோது பிருந்தாவ மக்கள் அவர்களை தொலைதூரம் செல்ல அனுமதிக்கவில்லை.
ஆயினும் கங்கைத்தாய் தங்கள் இடத்திற்கு வரமாட்டாளா என வேண்டினர். அவர்களின் விருப்பத்தைக் கேட்ட கிருஷ்ணர் கங்கையை தன் மனவலிமையால் கோவர்தனுக்கு கொண்டு வந்தார்.
அதிலிருந்து அந்த தொட்டி மானசி கங்கை என்றழைக்கப்படுகிறது. நந்த், யசோதை மற்றும் பிற பிருந்தாவன மக்களும் கங்கையில் குளிக்கச் செல்லும்போது தனது முதலை வாகனத்தில் கங்கைத் தாய் பயணமாவதைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.
மானசி கங்கையில் குளிப்பது பல லட்சம் மடங்கு கிருஷ்ணரின் அருளுடன் சேர்ந்த புண்ணியமளிப்பதாக நம்பப்படுகிறது. கோவர்தனில் நடத்தப்படும் பரிக்ரம பூஜை மானசி கங்கையில் குளிப்பதோடு முடிகிறது.