புராணங்களின்படி எருது வடிவில் தோன்றிய அசிதா என்ற அசுரனைக் கொன்ற கிருஷ்ணாவிடம் அவர் பாவங்களை நீக்க பல புனித ஆறுகளில் நீராடச் சொன்னாராம் ராதை.
அதைக் கேட்டு சிரித்த கிருஷ்ணர் நின்ற இடத்திலேயே காலை மிதிக்க அங்கு ராதை குறிப்பிட்ட அனைத்து நதிகளும் ஒரு குளத்தில் சங்கமம் ஆகியனவாம். பின் அதில் குளித்தெழுந்தாராம் கிருஷ்ணர். அந்த குளம் ஷ்யாம் குண்டம் என்றழைக்கப்படுகிறது.
கிருஷ்ணரின் இந்த செயலை மரியாதைக்குறைவாக கருதிய ராதை தன் தோழிகளுடன் சேர்ந்து வளையல்களாலேயே தோண்டி ஒரு குளத்தை உருவாக்கி அதில் மானசி கங்கை நீரை நிரப்பினாராம். அது ராதை குண்டம் என்றழைக்கப்படுகிறது.
கோவர்தனில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ள இந்த குண்டத்தைக் காண வருடாந்திர விழா நடைபெறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். தங்கள் பாவங்களைக் கழுவ இங்கு நீராடவும் செய்கிறார்கள்.