விருந்தாவன் நகரத்தில் உள்ள எல்லா கோயில்களுமே வழிபாட்டுத்தலங்களாக இருந்தாலும் இந்த ஷாஜி கோயில் அவற்றிலிருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. வித்தியாசமான கட்டிடக்கலை மற்றும் அழகியல் அம்சங்களுக்காக இந்த கோயில் புகழ் பெற்று விளங்குகிறது.
19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக்கோயில் ஒரு அரண்மனையைப்போன்று நுணுக்கமான கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானிய, இத்தாலிய மற்றும் பெல்ஜிய கலையம்சங்கள் இதில் கதம்பமாக காட்சியளிக்கின்றன.
ஒரு பிரம்மாண்ட வளாகத்தின் நடுவே வீற்றிருக்கும் இந்த கோயிலின் உட்சுவர், காட்சிக்கூடம் மற்ரும் வெளிச்சுவர்களில் சிற்பவடிப்புகள் மற்றும் ஓவியங்கள் போன்றவை காணப்படுகின்றன.
வழிபடுவதற்கு வருகை தரும் பக்தர்கள் மட்டும் அல்லாமல் இந்த கோயிலின் கலையம்சத்தை தரிசிப்பதற்காகவும் ஏராளமான பார்வையாளர்கள் வருகின்றனர். ஒரு அரண்மனையை போன்று கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில் கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.