கடா பீல் எனப்படும் இந்த பிரம்மாண்டமான குளம் அதை சுற்றிலும் உள்ள கரோ மலையில் அமைந்திருக்கும் பனை மரங்களால் சூழப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.
நாகோர்பாரா எனும் கிராமத்திற்கு அருகில் உள்ள இந்த குளம் துரா நகரத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் சரியாக துரா-கரோபதா-அம்பதிகிரி-மஹேந்திரஹஞ்ச் சாலையில் அமைந்திருக்கிறது. கரோ வம்சத்தை சேர்ந்த லெங்க்டா ராஜாவின் ஆணையின் பேரில் இது வெட்டுவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கடா எனும் சொல் ‘வெட்டப்பட்ட’ என்ற பொருளையும், ‘பீல்’ என்பது ஏரி எனும் பொருளையும் உணர்த்துகிறது. உஷ்ணமான கோடைக்காலத்தில் பிக்னிக் பிரியர்கள் இந்த குளக்கரைக்கு விஜயம் செய்கின்றன.
குழிந்தாற்போன்ற குள அமைப்பு மற்றும் சலனமற்ற நீர்ப்பரப்பு ஆகியவை இந்த நீர்த்தேக்கத்திற்கு ரம்மியமான தோற்றத்தை தருகின்றன.
ஒரு ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள இந்த குளத்தை சுற்றிலும் பனைமரத்தோப்புகள் காணப்படுகின்றன. தற்போது இந்த குளப்பகுதி கரோ பாப்டிஸ்ட் சர்ச் அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த குளத்தில் மீன் பிடிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டு அதில் வரும் பணம் பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது.
ஷில்லாங் நகரத்திலிருந்து தனியார் வாகனங்கள் மூலம் இந்த கடா பீல் குளக்கரைக்கு வரலாம். குவஹாட்டி மற்றும் துரா நகரங்களிலிருந்தும் பேருந்துகள் மூலம் வரலாம்.