வேலவன் கோயில் ஏலகிரி மலையில் உள்ள உயமான சிகரங்களுள் ஒன்றில் அமைந்துள்ளது. இது முருகக் கடவுளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து மலையின் முழுத் தோற்றமும் காணக் கிடைக்கிறது.
மலையின் அடிவாரத்திலுள்ள சமவெளிகளின் அழகிய தோற்றமும் இங்கிருந்து தெரிகிறது. தமிழத்தின் பெரும்பாலான பண்டிகைகள் இங்கு ஆடம்பரமான முறையில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் தான் இங்கு வர சிறந்த சமயம்.
ஏனென்றால் அப்போதுதான் இங்கு பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. எல்ல வருடமும் இந்த மாதங்களில் பக்தர்களும் இங்குள்ள மக்களும் கூடுகிறார்கள் .
கோயில் மணி எழுப்பும் ஓசை மக்களின் மனதின் கலாச்சாரத்தின் சாரத்தைப் பரவச் செய்கிறது. வேலவன் கோயில் வெளியில் அமைந்திருக்கும் கடோத்கஜன் சிலை சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் ஈர்ப்பாக அமைகிறது.



Click it and Unblock the Notifications