நாகாலாந்து பல்கலைக்கழகம் 1994 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இதற்கு கோஹிமா, திமாபுர், மெட்ஸிஃபீமா, மற்றும் ஸுந்ஹிபோடோ ஆகிய இடங்களில் வளாகங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தின் தலைமையகம் ஸுந்ஹிபோடோ மாவட்டத்தில் உள்ள லுமாமி கிராமத்தில் அமைந்துள்ளது.
நாகாலாந்து பல்கலைக்கழகத்துடன் சுமார் 54 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் தோராயமாக 25000 மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
இந்த பல்கலைக்கழகம், மனிதநேயவியல் மற்றும் கல்வித்தகுதி, சமூக அறிவியல்,, வேளாண் அறிவியல் மற்றும் கிராம மேம்பாட்டு, பொறியியல் மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகளை வழங்குகிறது.
இங்கே பல்கலைக்கழகம் அமைந்துள்ளதால் ஸுந்ஹிபோடோ, நாகாலாந்தின் முக்கிய இடமாக மாறி விட்டது. அவ்வாறு இல்லை எனில் இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இடமாகவே இருந்திருக்கும்.
இந்த பல்கலைகழகம் அமைந்ததன் காரணமாக ஸுந்ஹிபோடோ அனைத்து நாகா பழங்குடியின சமூகங்கள் வந்து கூடிப்பழகும் ஒரு, கலாச்சார வளர்ச்சி சம்பந்தமான மையமாக மாறிவிட்டது.
பல்கலைக்கழகம் அழகான பச்சை பசேல் என்ற சூழலில் அமைந்துள்ளதால், இது கல்வியை மேம்படுத்துவற்கான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
அதன் மகத்தான புவியியல் அமைப்பு காரணமாக இங்கு தாவரங்கள், விலங்குகள் மற்றும் விவசாயம் ஆகியன செழித்து காணப்படுகின்றன. ஆகவே, இங்கு விவசாய அறிவியல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.