அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனன்களா எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயில் அமைந்திருக்கிறது. இந்த தொன்மை வாய்ந்த கோயில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயிலில் தசவடராச்சர்டு எனும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவதோடு, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விஷ்ணு பகவானின் தசாவதாரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் வழிபாடு நடத்தப்படும்.