18 மற்றும் 19-ம் நூற்றாண்டிலிருந்தே மிகச்சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்கி வந்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், முன்பு மொகம்மதன் ஆங்லோ-ஓரியண்டல் கல்லூரி (MAO) என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
சர் சையது அகமது கானால் துவக்கப் பட்ட இந்த பிரசித்தி பெற்ற பல்கலைகழத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய நூலகத்தை கொண்ட இடமாகவும் மற்றும் 300 விதமான படிப்புகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கும் மையமாகவும் விளங்கி வருகிறது.
ஆரம்பத்தில் முஸ்லீம்களுக்கு பயிற்சியளித்து, அவர்களுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதையே நோக்கமாக இந்த பல்கலைக்கழகம் கொண்டிருந்தது.
காலப்போக்கில் மதம், இனம், நிறம் மற்றும் நாடு என்று எந்தவித பாகுபாடுகளும் இல்லாமல், அனைத்து மாணவர்களுக்கும் உயர்தரமான ஆங்கிலக் கல்வியை வழங்கும் நிலையமாக இது மாறிவிட்டது.
இந்தியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகவும் மற்றும் ஆசியாவில் நல்ல மதிப்பு பெற்றுள்ள இடமாகவும் இந்த பல்கலைக்கழகம் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications