இந்தியாவிலேயே மிகவும் உறுதியான கோட்டைகளில் ஒன்றாக அலிகார் கோட்டை உள்ளது. இப்ராஹிம் லோடியின் அரசவையில் இருந்த ஆளுநர் ஒருவரின் மகனால் இந்த கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. GT சாலையில் உள்ள இந்த பல கோண வடிவ கோட்டையை சுற்றிலும் நல்ல அகலமான அகழியும் உள்ளது.
காலப்போக்கில் இந்த கோட்டை பலமுறை மீண்டும் கட்டப்பட்டு, அதன் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. 18-ம் நூற்றாண்டில், முதலாம் மாதவராவ் சிந்தியாவின் காலத்தில் இந்த கோட்டை ஐரோப்பிய போர் நுட்பங்களை பயிற்சியளிக்கும் முதன்மையான மையமாக இருந்து வந்தது.
மேலும், 1857-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரின் மையமாகவும் இருந்துள்ளது. எனினும், இங்கிருந்த படைகள் அவர்களுடைய அதிகாரிகளை சுதந்திர போராட்டத்தின் பெயரால் கொலை செய்யவில்லை.
இந்த கோட்டை இந்திய மற்றும் பிரெஞ்சு கட்டிடகலைகளில் கட்டப்பட்டுள்ளது. தற்பொழுது, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின், தாவரவியல் துறையின் கீழ் இந்த கோட்டை உள்ளது. இந்த கோட்டையின் உள்பகுதியில் இருக்கும் தாவரவியல் பூங்காவில் எண்ணற்ற தாவர வகைகள் உள்ளன.