மாலிநித்ஹன் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே ஸியாங் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தொல்பொருள் தளம் ஆகும். இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 14 வது மற்றும் 15 வது நூற்றாண்டைச் சேர்ந்த துர்கா கோவிலின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் இங்கு பல்வேறு தெய்வங்கள், மலர் மற்றும் விலங்குகளின் கருங்கல் சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு புனித இடமாக கருதப்படும் இந்த இடத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றன.
இந்து மதம் புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய நிகழ்விற்கும் இந்த இடத்திற்குக்ம் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. ருக்மணி தனது திருமணத்திற்கு முன் கிருஷ்ணரால் கவர்ந்து செல்லப்பட்ட பொழுது அன்னை பார்வதி ஒரு மலர் மாலையுடன் இந்த இடத்தில் தான் வரவேற்றாள்.
பகவான் கிருஷ்ணரால் அன்னை பார்வதி ஷுச்ஹரு மாலினி என அழைக்கப்பட்டாள். எனவே இந்த இடம் அன்னை பார்வதியின் நினைவாக மாலிநித்ஹன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த இடம் அலாங்கில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ளது.