மேலசேவல் நவநீதகிருஷ்ணன் கோயில் மேலசேவலில் உள்ளது. 700 வருடம் பழமை வாய்ந்த இக்கோயில் திருவாங்கூர் ராஜாக்கள் வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. கிரானைட் கற்களால் செய்த சாலிகிராம மூலவரின் சிலை, கையில் நெய்யுடன் நிற்பதைப் போல் நிறுவப்பட்டிருக்கிறது.
மூல மண்டபத்தில் ராமாயணம், மகாபாரதம் மற்றும் தசாவதாரக் கதைகளை குறிக்கும் விதமாக பல சிலைகள் செதுக்கப்பட்டிருகின்றன. இக்கோயில் ஒரு ஏக்கருக்கு மேலான பரப்பளவில் அமைந்துள்ளது.
கோயில் வளாகத்திலேயே நெற்பயிர்களிட்ட விவசாய நிலங்கள் மற்றும் தென்னை தோப்புக்களும் அடங்கும். நினைத்தது நடக்கும், முக்கியாமாக பிள்ளைச் செல்வம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தரும் தெய்வம் என்றெண்ணி பல பக்தர்கள் வரும் கோயில் இது. கிருஷ்ணாஷ்டமி திருவிழா ஒவ்வொரு வருடமும் இக்கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப் படுகின்றது.



Click it and Unblock the Notifications