பாபநாசம் பாபனாசர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முக்கியம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் பாபநாசம் என்னும் சிறிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலக்கடவுள் சிவபெருமான்.
இக்கோயிலில் புனித நீராடினால் நம் மேல் படிந்துள்ள பாவங்கள் கரைந்தோடும் என்ற நம்பிக்கையினாலேயே இக்கோயில் பாபநாசம் என்ற பெயர் பெற்றது.
திருமண வைபவங்கள் போன்ற சடங்குகளை இக்கோயிலில் நடத்துவது மிக மங்களகரமானது என்று நம்பப்படுகிறது. இந்த கிராமத்தில் நடைபெறும் அதிகப்படியான திருமணங்கள் இக்கோயிலிலே நடத்தப்படுகின்றன.



Click it and Unblock the Notifications