மாங்க்ஹிம் கோவில், அரிடாரில் உள்ள `மைடி' கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் இயற்கை வழிபாடுகளில் நம்பிக்கை கொண்ட `ராய்' பிரிவினருக்கு சொந்தமானது. இந்த கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் யானைகளின் கால் தடம் உள்ளது. அது சுற்றுலா பயணிகளை ஈர்கிறது.
ராய் சமூக மக்கள், இந்த கோவிலில் ஒரு வருடத்திகு இரு முறை, ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி `ஸகியு' என்கிற வழிபாட்டை மேற்கொள்கின்றனர். இந்த நாள் பொதுவாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வருகிறது. வயல்களில் பழங்குடியின மக்களால் விதைக்கபடுகின்ற விதைகள் வளர்ந்து பூக்கும் போது `ஸகியு பூஜை' செய்யப்படுகிறது.
இந்த பண்டிகை ஆடல் மற்றும் பாடல்களுடன் கொண்டாட்டப்படுகின்றது. இந்த நடனம் `ஷில்லி' என அழைக்கப்படுகின்றது. இது பருவ காலங்களில் இடம் பெயரும் பறவைகளின் அசைவை ஒத்திருக்கிறது.
இந்த கொண்டாட்டம் ஒரு மாதம் வரை கூட நீடிக்கலாம். அது அந்த குடும்ப உறுப்பினர்கள் சிதறி இருக்கும் நிலப்பகுதியை பொருத்தது. இந்த திருவிழாவின் போது தூள்(திலா), யம்டா, வில், அம்பு, போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும்.
இந்த கருவிகளை அறுவடை திருவிழா நடைபெறும் வரை பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை. இந்த திருவிழா ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் நடைபெறுகிறது.