ஔரங்காபாதில் அமைந்துள்ள இந்த ஷா கஞ்ச் மஸ்ஜித் என்று அழைக்கப்படும் இந்த மசூதியின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒரு அற்புத கட்டிடக்கலை அதிசயமாகும்.
ஒரு உயரமான மேடையின் மீது இந்த மசூதி நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதன் மூன்று புறங்களும் சரிவாக அமைந்துள்ளன. நான்காவது புறம் அதன் மீது ஏறும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மசூதியானது இந்தோ சராசனிக் கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளது. இதனுள்ளே 24 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றுள் 6 தூண்கள் சதுர வடிவில் அமைந்துள்ளன. முன்பகுதியில் உள்ள முற்றத்தில் இரண்டு பெரிய நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மசூதியின் நுழைவாயில் ஒரு சிறிய மசூதியை போன்று வடிவமைக்கப்பட்டு பாரம்பரிய விதான வளைவுடன் இரு புறமும் இரண்டு மினார்களுடன் காட்சியளிக்கின்றது.



Click it and Unblock the Notifications