பாதாமிக்கு வருகை தரும் பயணிகள் தவறாமல் இந்த குகைக்கோயில்களையும் பார்ப்பது முக்கியமாகும். மணற்பாறைகளால் ஆன மலையில் குடையப்பட்டுள்ள இந்த குகைக்கோயில்களில் புராண ஐதீக சம்பவங்களையும் நீதிகளையும் விளக்கும் புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
இங்கிருக்கும் 4 குகைக்கோயில்களில் முதல் முக்கியமான கோயில் 5 நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இதில் சிவனின் அர்த்தநாரீஸ்வர அவதாரம் மற்றும் ஹரிஹர அவதாரங்கள் நடராஜ தாண்டவக்கோலங்களுடன் காணப்படுகின்றன.
ஹரிஹர அவதாரத்தில் வலப்புறம் சிவனும் இடப்புறம் விஷ்ணுவுமாக சிவபெருமான் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பக்தர்கள் மகிஷாசுரமர்த்தினி, கணபதி, சிவலிங்கம், ஷண்முகா போன்ற சிற்பங்களையும் பார்க்கலாம்.
இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்ணுக்கடவுளின் வராஹ அவதாரமும் திரிவிக்கிரம அவதாரமும் இடம்பெற்றுள்ளன. குகைக்கோயிலின் கூரையில் புராணக்காட்சிகளும், கருட அவதாரமும் இடம்பெற்றுள்ளன.
100 அடி நீளத்துக்கு காணப்படும் மூன்றாவது குகைக்கோயிலில் விஷ்ணுவின் திரிவிக்கிரம மற்றும் நரசிம்மா அவதாரங்கள் காணப்படுகின்றன. இதுதவிர சிவன் மற்றும் பார்வதியின் திருமணக் காட்சி ஓவியங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
நான்காவது குகைக்கோயில் ஜைன மரபுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதில் மஹாவீரரின் பத்மாசன கோல சிற்பம் மற்றும் பர்ஷவநாத தீர்த்தங்கரரின் சிறு சிற்பம் போன்றவை வடிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications