ஜல் மகாதேவ் பலங்கரில் இருந்து சுமார் 84 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தின் விசித்திரம் மிக்க அம்சம் என்னவெனில், இங்கு சிவலிங்கத்திற்கு பதிலாக சிவனின் சிலையானது ஒரு நீரோட்டத்தின் அடியில் அமைந்துள்ளது.
இங்கு வரும் பக்தர்கள், சிவனின் சிலைக்கு பால் மற்றும் நீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றார்கள். நாம் ஜல் மகாதேவ்வில், சிவன் அல்லது சிவபெருமானின் சுயம்பு மூர்தத்தை அவருடைய சொந்த வடிவத்தில் தரிசிக்கலாம்.
நாட்டின் பல்வேறு இடங்களிலில் இருந்து வரும் பக்தர்கள் நீரோடையின் மீது பெல் இலைகள் மற்றும் மலர்களை சொறிந்து வழிபடுகின்றனர். இந்த இடத்தை சுற்றி பல்வேறு சிவலிங்கங்கள் உள்ளன.
முக்தி தரும் இந்த நீரோடையில் பக்தர்கள் நீராடுகின்றனர். ஜல் மகாதேவ் அழகான மதாரா மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடம் பல்வேறு கவர்ச்சிகரமான தாவரங்கள், அழகான பறவைகள் மற்றும் பல்வேறு விலங்குகளுக்கு இருப்பிடமாக உள்ளது.
மேலும் இந்த இடம் பல்வேறு பூச்சிகள் மற்றும் பல்வேறு ஊர்வன இனங்களின் இருப்பிடமாக திகழ்கின்றது. இந்த இடத்திற்கு ஆன்மீக அன்பர்களைத் தவித்து சுற்றுலா பயணத்தை விரும்பும் பயணிகளும் வருகை புரிகின்றனர். சாதனை பயணத்தை விரும்பும் பயணிகளுக்கு இங்கு ட்ரெக்கிங் மற்றும் முகாம் வசதிகள் கிடைக்கின்றன.
ஜல் மகாதேவ், பலங்கரின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகின்றதும். புகைப்படத்துறையில் ஆர்வம் உள்ள மக்கள் இந்த இடத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும்.



Click it and Unblock the Notifications