பட்நகர், பலங்கிரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்தில் உங்களுடைய ஆவலை தூண்டக்கூடிய அழகிய மற்றும் பண்டைய கோவில்கள் பல உள்ளன.
இங்குள்ள பத்மேஷ்வரி கோவில் சாளுக்கிய பாணியிலான கட்டிடக்கலை அமைப்பை கொண்டிருக்கின்றது. இதைத் தவிர கி.பி 12 நூற்றாண்டைச் சேர்ந்த ஸோமேஷ்வர் சிவாலயம் மிக முக்கிய யாத்திரை தளமாக விளங்குகின்றது.
பட்நகரில் நீங்கள் இப்பொழுது யாத்திரை சென்றால் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு பண்டைய கோவில்களை காணலாம். இங்குள்ள பெரும்பாலான கோயில்கள் மேற்கு ஒரிசாவை ஆண்ட செளகான் வம்சத்தவரின் ஆட்சியின் பொழுது கட்டப்பட்டன.
பட்நகர், பாலங்கிரின் பண்டைய வரலாறு மற்றும் கலாச்சாரத்தை ஆராய்ந்து அறிய உதவும் ஒரு மிக முக்கிய நகரம் ஆகும். இந்த நகரம் பண்டைய காலத்தின் அரச வாழ்க்கையின் மிச்சத்தை இன்றும் பாதுகாத்து வைத்திருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டு பெரும் திரளான வரலாறு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் இந்த இடத்திற்கு வருகை புரிகின்றனர்.



Click it and Unblock the Notifications