ராணிப்பூர் மற்றும் ஜ்ஹரில் ஆகிய இரண்டும் மாவட்ட தலைநகரான பாலங்கிரில் இருந்து சுமார் 104 கி.மீ. தொலைவில் உள்ள இரட்டை கிராமங்கள் ஆகும். பண்டைய காலங்களில், ராணிப்பூர் பட்நகரின் ராணிக்களின் தங்கும் இடமாகவும் ஜ்ஹரில் ஒரு கோட்டையாகவும் பயன்படுத்தப்பட்டது.
இதைத் தவிர இந்த இடம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்தது. இங்கே சைவம், வைணவம், பெளத்தம், சாக்தம், தாந்திரிகம் போன்ற பல்வேறு மதங்கள் செழித்து வளர்ந்தன. மேலும் டாங் ஜோர் என்கின்ற டாங் நதி இங்குள்ள குக்கிராமங்கள் வழியே பாய்ந்து செல்கின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க இடங்களான பட்நகர், மாரகெளடா, அஸுர்கார், நரசிங்கநாத், ஸைந்தாலா போடோகார், மற்றும் பெல்க்ஹன்டி போன்றவை ராணிப்பூர் மற்றும் ஜ்ஹரில் கிராமங்களை சுற்றி காணப்படுகின்றன.
டக்ஹின் கோசலைச் சேர்ந்த ஸோமாவன்ஸி அரசர்களால் கட்டப்பட்ட பல்வேறு கோவில்கள் இங்கு உள்ளன. அந்தக் கோவில்கள் கி.பி 8 மற்றும் 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளன.
வரலாற்று ஆய்வாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் சுமார் நீளவாக்கில் அரை மைலிலும், அகலவாக்கில் கால் மைலுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் சுமார் 200 கோவில்கள் அமைந்துள்ளன.
ராணிப்பூர்-ஜ்ஹரில் பகுதியானது கூரைகள் இல்லா கோவில்களுக்கு மிகவும் பிரபலமானது. அத்தகைய கோவில்கள் ஹைபதெரல் கோவில்கள் என அழைக்கப்படுகின்றது.
அத்தகைய கோவில்களில், சுமார் 64 யோகினிகள் உள்ள கோவில் ஒன்று இங்கு உள்ளது. இங்குள்ள ஒரு மற்றொரு முக்கிய கோவில் ஸோமேஷ்வர் கோவில் ஆகும்.
இந்தக் கோவில் மட்டா மெளரிய சைவாச்சாரிய கக்கன சிவா என்பவரால் கட்டப்பட்டது. இந்த இடத்தில் ஒரிசாவின் மிகப் பெரிய செங்கல் கோவிலானா இந்டர்லாத் கோவிலும் உள்ளது.



Click it and Unblock the Notifications