சர்வதேச அளவிலேயே மிகப்பெரிய தியான பிரமிடு ஸ்தலம் இந்த பிரமிட் வேலி’(பள்ளத்தாக்கு) ஆகும். தன்னை உணரும் அனுபவத்துக்கான தேடலில் ஒரு கருவியாக இது மக்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவுகிறது.
பெங்களூரிலிருந்து வெகு தொலைவில் ராமநகர் மாவட்ட த்தில் கனகபுரா தாலுக்காவில் இந்த தியான பிரமிடு அமைந்துள்ளது. 2003ம் ஆண்டு பிரம்மரிஷி பண்டிட்ஜியால் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்திற்கு கார், பஸ் அல்லது பைக் மூலமாக மட்டுமே செல்ல முடியும். முதலில் மைத்ரேய புத்த விஸ்வாலயம் என்று அழைக்கப்பட்ட இந்த ஆன்மீக தியான ஸ்தலம் பின்னர் பிரமிடு வேலி (பள்ளத்தாக்கு) என்று மாறிவிட்டது. இது இந்தியாவில் உள்ள ‘பிரமிட் ஸ்பிரிச்சுவல் ட்ரஸ்ட்’ எனும் அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. (அதனாலேயே இந்த பெயரில் அழைக்கப்படுகிறது.)
இந்த ஆன்மீக மையத்தின் பிரதான நோக்கம் தியானம் என்ற அம்சத்தில் உள்ள அறிவியல் ரீதியான உண்மைகளை பரப்புவதாக உள்ளது. அது மட்டுமன்றி தியானத்திற்கான பிரத்யேக இடமாகவும் மற்றும் பிரமிடு தியான இயக்கத்தின் கேந்திரமாகவும் இது விளங்குகிறது.
யாரும் உங்களை நன்கொடைகள் கேட்டு தொல்லை தராமல், உங்களிடம் எதையும் விற்க முற்படாமல் அல்லது வேறெந்த இடையூறுகளும் இல்லாமல் தியானம் மற்றும் அமைதி மட்டுமே பிரதானம் எனும் சூழலை இங்குதான் நீங்கள் அனுபவிக்க முடியும். அப்படி ஒரு சூழல் இங்கு இயல்பாக காணப்படுகிறது.
இந்த பிரமிடு மண்டபத்தில் தியானத்தில் அமரும்போது வெளிப்புற சலனங்கள் மறைந்து உங்கள் உள் மூச்சை நீங்கள் உணரும் அளவுக்கு ஒரு மௌனத்தினை அது தோற்றுவிக்கிறது. அப்படி உங்கள் மூச்சை நீங்களே உணர்வதே தியானத்தின் அடிப்படை மந்திரம். அந்த மந்திரத்தை இங்கே பிரமிடு வேலியில் நீங்கள் கண்டெடுப்பது நிச்சயம்.