ஷஹாபாத் கோட்டை என்றழைக்கப்படும் இந்த புராதனக் கோட்டை ஒரு காட்டுப்பகுதியில் உள்ள மலையுச்சியில் அமைந்துள்ளது. இது 1521ம் ஆண்டில் சௌஹான் வன்ஷி தண்டேல் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த முகுத்மணி தேவ் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
ஹடோதி பிரதேசத்திலேயே மிகச்சிறந்த உறுதியான கோட்டை எனும் பெருமையை இது பெற்றுள்ளது. குண்டகோஹ் பள்ளத்தாக்கினால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை 18 பீரங்கிகளையும் பெற்றுள்ளது. இந்தக் கோட்டை வளாகத்தில் டோப்கானா எனப்படும் வெடிமருந்து கிடங்கு, பருத்கானா மற்றும் சில கோயில்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.