பத்ராவதி நகருக்கு அருகில் உள்ள பத்ராவதி அணை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். 194 அடி உயரமுள்ள இந்த அணை பத்ராவதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இதை கர்நாடகாவின் பொறியியல் பிதாமகர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் கட்டியுள்ளார்.
இந்த அணை பத்ரா மற்றும் அதன் அருகாமை பகுதிகளின் மின்சார மற்றும் நீர்பாசனத் தேவைகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. பத்ராவதி அணை சிறிய தீவுக் காடுகளும், குன்றுகளும் புடைசூழ பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க காத்துக் கொண்டிருக்கிறது. இது லக்கவல்லி கிராமத்துக்கு அருகில் அமைந்திருப்பதால் லக்கவல்லி அணை என்றும் அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications