பத்ராவதிக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய ஆன்மீக ஸ்தலம் இந்த லக்ஷ்மி நரசிம்மர் கோயில் ஆகும். இது 13ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.
விஷ்ணுவர்த்தன மன்னரின் பேரனான வீர நரசிம்மர் என்பவரால் இது கட்டுவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவ மேடை அமைப்பின்மீது கட்டப்பட்டுள்ள இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மருக்காக எழுப்பப்பட்டுள்ளது.
பக்தர்கள் இந்த கோயிலின் உள்ளே காணப்படும் ஷீ கிருஷ்ணா சிலை, கணேசர் சிலை, புருஷோத்தமர், சாரதாம்பா தேவி ஆகியோரின் சிலைகளையும் காணலாம். மூன்று கோபுரங்களைக் கொண்டுள்ளதால் இது திரிகூடாச்சல பாணியில் அமைந்த கோயிலாக அறியப்படுகிறது. இந்த கோபுரங்களில் ஏற ஐந்து படிகள் காணப்படுகின்றன.
வெளிப்புற சுவர் அருகே துவஜஸ்தம்பம் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஒரு கல் பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு தூண் வடிவமும் காணப்படுகிறது.
இந்த கோயிலின் வெளிப்பகுதி ஹொய்சள பாணியில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கட்டிடக்கலை அம்சத்தை பாதுகாக்கும் பொறுப்பை கர்நாடக அரசின் தொல்லியல் துறை ஏற்றுள்ளது.