கங்கா கோயிலின் கட்டிடப்பணி 1845-ஆம் ஆண்டு பால்வாந்த் சிங் மகாராஜாவால் ஆரம்பிக்கப்பட்டாலும், அதன் பிறகு 90 ஆண்டுகள் கழித்துதான் கோயில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டது.
இந்த கோயில் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டதும் பால்வாந்த் மகாராஜாவின் சந்ததியை சேர்ந்த பிரிஜேந்திர சிங் மகாராஜா கங்கா தேவியின் விக்ரகத்தை கோயிலில் பிரதிஷ்டை செய்தார். மேலும் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் சம்பளப் பணத்திலிருந்து தான் இந்த கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
கங்கா கோயில் ராஜ்புட், முகல் மற்றும் திராவிட கட்டிடக்கலைகளின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் சுவர்களும், தூண்களும் சொக்கவைக்கும் சிற்ப வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இங்கு கிருஷ்ணர், லட்சுமி நாராயணன் மற்றும் சிவ பார்வதியின் சிலைகளை நீங்கள் பார்க்கலாம். மேலும் இந்த கோயிலுக்கு கங்காசப்தமி மற்றும் கங்கா தசரா சமயங்களில் ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.