பேச்சுக் கலை, செயல்பாட்டு கலை மற்றும் காட்சிக் கலை என பல்வகையான கலையம்சங்களின் இல்லமாகவும், போபால் நகரத்தின் கலை தொடர்பான அனைத்து விஷயங்களுடனும் தொடர்பு கொண்டுள்ள இடமாக பாரத் பவன் உள்ளது.
உங்களுக்கு செயல்பாட்டுக் கலைகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த உயர்கலை மையத்திற்கு ஒரு முறை வந்து இதன் தனித்தன்மையான வடிவத்தைக் காண்பது மிகவும் வேண்டப்படும் விஷயமாகும்.
இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுடன் இரண்டறக் கலந்துள்ள பாரத் பவன், அதன் காரணமாகவே மிகவும் இடவசதியுள்ள இடமாகத் தோற்றமளிக்கும். ஒவ்வொரு வருடமும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக பாரத் பவன் உள்ளது.
பாடல் கலை, செயல்பாட்டுக் கலை மற்றும் காட்சிக் கலை ஆகிய கலைகள் வளர்க்கப்பட்டு வரும் இடமாகவும் மற்றும் பழைய மற்றும் புதிய கலைகளை வெளிப்படுத்தவும், உருவாக்கவும் தகுந்த இடமாகவும் பாரத் பவன் உள்ளது.
மேலும், பாரத் பவனில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கான அருங்காட்சியகத்தில் மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியின மக்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளின் பழங்குடியின மக்களின் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications