சிறப்பான கட்டிடக்கலை மற்றும் அற்புதனமான கட்டமைப்பு போன்றவற்றைக் கொண்டிருப்பதால், போபால் நகரத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக சௌகத் மஹால் உள்ளது.
பல்வேறு விதமான கட்டிடக்கலை வழிமுறைகளின் இணைவாக இருக்கும் இந்த கட்டிடத்தை, ஒரு பிரெஞ்சுக்காரர் ஐரோப்பிய மற்றும் இந்திய கட்டிடக்கலைகளைப் பின்பற்றி பிரமிக்கத்தக்க அரண்மனையாக கட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே இந்நகரத்தில் இருக்கும் பிற கட்டிடங்களை விடவும் புகழ் பெற்ற இடமாக சௌகத் மஹால் உள்ளது. சௌகத் மஹாலின் உள்ளே உள்ள மிகப்பெரிய கூடம் தான் சதார் மன்ஸில் என்பதாகும்.
நவாப்களின் ஆட்சிக்காலத்தில், பொதுமக்கள் கூடி நின்று தங்களுடைய குறைகளை நேரடியாக நவாப்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆட்சிக் கூடமாக இந்த இடம் இருந்துள்ளது. மிகவும் பகட்டாகவும் மற்றும் அலங்காரம் மிக்கதாகவும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூடம் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
சதார் மன்ஸிலை சுற்றிலும் பசுமையான தோட்டங்கள் சூழப்பட்டிருப்பதால் இந்த இடம் ஒரு சொர்க்கத்தைப் போன்று காட்சியளிகும்.