தொல்பொருள் தளங்கள், மதம்சார்ந்த தளங்கள் மட்டுமல்லாது வனப்பகுதிகளும் இங்கு அதிகமாக உள்ளன. சட்டீஸ்கரின் புகழ்பெற்ற சரணாலயமாக 1945ல் உருவாக்கப்பட்ட அசனாக்மர் விளங்குகிறது.
அழியக்கூடிய உயிரனிங்களான சிறுத்தைகள், பெங்கால் புலிகள், காட்டெருமைகள் ஆகியவை இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி சித்தல், வரிக்கழுதைப்புலி, கேனிஸ், கரடி, தோல், சம்பார் மான், நீள்கை, நான்கு கொம்பு மான், சிங்கரா ஆகிய விலங்குகளும் உண்டு.
557.55 சதுர கிமீ பரப்பளவில் உள்ள இந்த சரணாலயத்தில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன. பிலாஸ்பூருக்கு வடக்கே உள்ள இப்பகுதியில் மழைக்காலத்தில் மக்கள் நுழைய தடை உள்ளது. மத்திய பிரதேசத்தின் கன்ஹா சரணாலயம் கன்ஹா-அசனாம்கருடன் இணைக்கப்பட்டுள்ளது. சால், சாஜா, பிஜா, மூங்கில் ஆகிய தாவரங்களும் இங்கு காணப்படுகின்றன.
கொங்காபாணி ஜலஷ்யா அணை, சரணாலயத்திற்கு செல்லும் வழியில் உள்ளது. பயணிகள் இங்கு தங்கமுடியாததால் அசனம்கரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கலாம். பெலாகானா ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. மேலும் வாடகைக் கார்கள் மூலமும் பயணிகள் இங்கு வரலாம்.