பிலாஸ்பூரில் இருந்து 25கிமீ தொலைவில் உள்ள ரத்தன்பூர் தேசிய நெடுஞ்சாலை எண் 200ல் உள்ளது. பல்வேறு வம்ச அரசுகளை நினைவுப்படுத்தும் இடமாக திகழ்கிறது. பாபா பைரவநாத்தின் ஒன்பது அடி சிலை ஒன்று இங்குள்ளது.
சத்தீஸ்கரின் புராதான தலைநகர் என்ற பெருமையும் இதற்குண்டு. ரதன்ராக் என்பவரால் 11ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் ஹைஹையவன்சி வம்சத்தின் தலைநகராகவும் விளங்கியது.
ரத்தன்பூரின் மஹமாயா கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. ரத்னேஷ்வர் மஹாதேவ் கோவில் மற்றும் லட்சுமி தேவி கோவிலும் தனித்துவத்துடன் விளங்குகின்றன. பாலியில் இருந்து 30கிமீ தொலைவிலும், நிர்தியில் இருந்து 15கிமீ தொலஒவிலும் உள்ளது.
மராத்திய அரசர் பிம்பாஜி போன்ஸ்லே இங்கு ராம்தேக் என்ற மற்றொரு கோவிலையும் கட்ட அந்த கோவிலும் புகழ்பெற்று விளங்குகிறது. .இங்குள்ள கோட்டை ஒன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
கங்கா ஜமுனா சிலை, பழங்கால கற்சிலை, பிரம்மன், விஷ்ணு, சிட்சுரோய், ஜகந்நாத், தந்தவ் நடனம் ஆகிய சிலைகள் இங்கு உள்ளன,