மஹாபோதி கோயில் ஸ்தலத்தில் உள்ள இந்த போதி மரம் ஷீ மஹாபோதி என்று அழைக்கப்படுகிற்து. புனிதமான இந்த மரத்தின் அடியில்தான் புத்தர் ஞானோதயம் பெற்றதாகவும், எனவே இந்த மரத்தின்மீது புத்தருக்கு அளவற்ற மதிப்பு இருந்ததாகவும் பௌத்த மறை நூல்கள் குறிப்பிடுகின்றன.
பல்வேறு மன்னர்களின் ஆட்சியில் இந்த மரத்தை அழிக்கும் முயற்சிகள் நடந்திருந்தாலும் இது அடுத்தடுத்து தழைத்து வந்திருக்கிறது. தற்போதுள்ள போதிமரம் ஆதியில் இருந்த போதி மரத்தின் ஐந்தாவது தலைமுறையாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications