போர்டி கிராமத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள உம்பர்காவ்ன் எனும் இடத்தில் இந்த கல்பதரு பொடானிக்கல் கார்டன் அமைந்துள்ளது. பலவித அரிய மரவகைகளை இங்குள்ள பூங்காத் தோட்டம் கொண்டுள்ளது.
இந்த தாவரவியல் தோட்டத்தில் காணப்படும் மரங்கள் இந்த கிராமத்துக்கே ஒரு பசுமையான போர்வையை அளித்துள்ளன. மழைக்காலம் மற்றும் மழைக்காலம் முடிந்தவுடன் குளிர்கால துவக்கப்பகுதியில் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்தால் அற்புதமான ஒரு இயற்கைச்சூழலை தரிசிக்கலாம்.
நாலாபுறமும் தெரியும் தாவரப்பசுமையும் பல வகை மரங்களும் நம் மனதை லேசாக்கி புத்துணர்ச்சியூட்டுகின்றன.புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்களான ராமாயாணா மற்றும் மஹாபாரதா போன்றவை பெரும்பாலும் இந்த தோட்டப்பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளன.
இந்த தொடர்களின் தயாரிப்பு தளமான விருந்தாவன் ஸ்டுடியோஸ் இங்கு அருகிலேயே அமைந்துள்ளது. தஹானு முனிசிபல் நிர்வாகத்தின் மூலம் இந்த பூங்காத்தோட்டம் பராமரிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications