ஜெயித் சாஹர் ஏரியின் கரையின் மீது இந்த சுக் மஹால் எனும் மாளிகை அமைந்துள்ளது. உம்மேத் சிங் மன்னரால் கட்டப்பட்ட இந்த மாளிகையில் புகழ் பெற்ற எழுத்தாளர் ‘ருட்யார்டு கிப்ளிங்’ ஒரு காலத்தில் வசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாளிகையின் அற்புதமான சூழல் தந்த உத்வேகத்தில் ‘கிம்’ எனும் ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார். தற்சமயம் இம்மாளிகை நீர்ப்பாசனத்துறை விருந்தினர் இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
சுக் மஹால் மாளிகையின் இரண்டாவது தளத்தில் ஒரு வெண் பளிங்குக்கல்லினால் ஆன சாத்ரி (நினைவு மாடம்) காணப்படுகிறது. இது தவிர, இளமஞ்சள் நிற பளிங்குக்கற்களால் ஆன, அற்புதமான தோரணச்சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட 66 நினைவுச்சின்ன மாடங்களும் இந்த ஸ்தலத்தில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications