பைந்தூர் கடற்கரை மற்றும் பைந்தூர் ஆற்றுக்கு அருகில் அமைந்திருக்கக் கூடிய சோமேஸ்வரா ஆலயம் அப்பகுதியின் மிகவும் பழமையான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை காணவும், கோயிலில் உள்ள சிற்பங்களின் அழகினை கண்டு ரசிக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வருகின்றனர்.