1865ம் ஆண்டு கொச்சி மஹாராஜாவால் கட்டப்பட்ட இந்த திருப்புனித்துறா மலை அரண்மனையில் தற்போது கேரளாவின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் இயங்குகிறது.
திருப்புனித்துறா எனும் இடத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனை வளாகம் பாரம்பரிய கேரள பாணியில் நிர்மாணிக்கப்பட்ட 49 கட்டிடங்களை உள்ளடக்கியுள்ளது.
தொல்லியல் மியூசியம், பாரம்பரிய கலாச்சார மியூசியம், மான் பூங்கா, கற்கால மாதிரிப்பூங்கா மற்றும் குழந்தைகள் பூங்கா போன்றவை அமைந்துள்ளன.
இன்று இந்த அரண்மனைப்பகுதி கேரள அரசாங்கத்தின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திங்கள் கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் பார்வையாளர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்ற்னர்.
கொச்சி ராஜ வம்சத்தின் கிரீடம் மற்றும் ஆபரணங்கள், ஓவியங்கள், பளிங்கு மற்றும் கருங்கல் சிற்பங்கள், ஆயுதங்கள், கல்வெட்டுக்குறிப்புகள், நாணயங்கள், விலைமதிப்பற்ற கற்கள், ராஜ படுக்கைகள் மற்றும் எழுத்தோவிய பிரதிகள் போன்ற அரிய காட்சிப்பொருட்களை இந்த அருங்காட்சியகத்தில் பார்த்து ரசிக்கலாம்.
கொச்சி நகரத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த திருப்புனித்துறா மலை அரண்மனை மியூசியத்திற்கு மிக சுலபமாக சாலைப்போக்குவரத்து மூலம் சென்றடையலாம்.
பிற தகவல்கள் :
அனுமதிக்கப்படும் நாட்கள்: செவ்வாய் முதல் ஞாயிறு வரை
திறந்திருக்கும் நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை,மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை