கடலூரிலுள்ள நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கும் நிலக்கரி எரிபொருள் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலக்கரியிலிருந்து உரங்கள் மற்றும் 'குக்கிங் கோல்' ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகப்பெரிய திறந்தவெளி அச்சு சுரங்கத்தையுடைய இடமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையம் விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை அறிய ஆவலாக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இவ்விடத்திற்கு சென்று வாருங்கள்.