பஞ்ச்புலா—ஐந்து பாலங்கள் என்று பொருள்படும் இந்த இடம், டல்ஹெளசியிலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது. பஞ்ச்புலாவிலிருந்துதான் டல்ஹெளசி மற்றும் பலூனில் வசிப்பவர்களுக்கான குடிதண்ணீர் வழங்கப் படுகிறது.
இந்த இடம் பீய்ச்சியடிக்கும் ஓடைகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். இந்த ஓடைகள் தயாகுந்த்-ன் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி, பிறகு கீழ்நோக்கிப் பாய்ந்து சென்று, பஞ்ச்புலாவில் உள்ள பிற நீர்நிலைகளில் கலந்து விடுகிறது.
இந்த ஓடைகள் சந்திக்கும் இடத்தில், புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரரான சர்தார் அஜித் சிங்-ன் நினைவாக ஒரு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. பஞ்ச்புலா செல்லும் வழியில் உள்ள நீங்கள் மனதை மயக்கும் நீர்ச்சுனையான சட்தாராவை காணலாம். அதன் தண்ணீர் மருத்துவ குணம் வாய்ந்தது என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகிறது.