முகாலர்களின் படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக 1559ம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. 30000 ச.மீ பரப்பளவில் பிரம்மாண்டமான அளவில் இந்த கோட்டை வீற்றிருக்கிறது.
இந்த கோட்டையில் பீரங்கிகள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாய்ப்பகுதியில் அவை உருவாக்கப்பட்ட வருடம் பொறிக்கப்பட்டிருக்கிறது.
‘சர்ச் ஆஃப் போம் ஜீஸஸ்’, ‘அவர் லேடி ஆஃப் ரோசரி’ சேப்பல், சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் ரிமெடீஸ் ஆகிய மூன்று கிறித்துவ தேவாலயங்கள் இந்த கோட்டை வளாகத்தில் அமைந்துள்ளன. இவை தவிர சேப்பல் ஆஃப் அவர் லேடி ஆஃப் அங்கஸ்டியாஸ் எனும் தேவாலயமும் கோட்டையின் வெளிப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
பிரசித்தி பெற்ற போர்த்துகீசிய புலவரான பொகாஜ் என்பவர் வசித்த வீடு இந்த கோட்டையின் கடற்பகுதி வாசலுக்கு அருகில் அமைந்திருக்கிறது. கவிதை மற்றும் இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் இந்த புகழ் பெற்ற கவிஞர் வாழ்ந்த இல்லத்தை பார்த்து ரசிக்கலாம். ச
லவைக்கல்லால் அமைக்கப்பட்டுள்ள அவரது கல்லறையும் வீட்டின் வாசற்பகுதியிலேயே காணப்படுகிறது. இருப்பினும் இந்த வீடு பூட்டியே காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications