தேஷ்நோக் கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கர்ணி மாதா திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் ஆகிய இரு தருணங்களில் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது கர்ணி மாதா கோயில் மற்றும் தேஷ்நோக் நகரமே விழாக் கோலம் பூண்டிருக்கும்.