தேஷ்நோக் கிராமத்தில் அமைந்திருக்கும் கர்ணி மாதா கோயில் எலிக் கோயில் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமான கர்ணி மாதா, துர்கா தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது.
அதோடு பிக்கனேர் நகரை நிர்மாணித்த ராவ் பிகாஜி மகாராஜா இந்த கர்ணி மாதாவின் அருளை பெற்ற நாள் முதலாக பிக்கனேர் சாம்ராஜ்யத்தின் குலதெய்வமாகவும் கர்ணி மாதா வணங்கப்பட்டு வந்தது.
கர்ணி மாதா கோயில் 20-ஆம் நூற்றாண்டில் கங்கா சிங் மகாராஜாவ்ல் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் காணப்படும் சலவைக்கல் சிற்ப வேலைப்பாடுகள் கண்ணை கவரும் விதத்தில் அற்புதமாக படைக்கப்பட்டிருக்கின்றன.
இக்கோயில் கபாஸ் என்று அழைக்கப்படும் 20, 000-க்கும் மேற்பட்ட எலிகளுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. இங்குள்ள எலிகள் அனைத்தும் 'சரண்ஸ்' எனும் பெயர்கொண்ட கர்ணி மாதாவின் எதிர்கால குழந்தைகளின் ஆன்மாக்களை சுமந்து கொண்டு திரிவதாக தேஷ்நோக் கிராமத்தை சேர்ந்த மக்கள் நம்புகின்றனர். இவை யாவும் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதத்தை கொண்டே உயிர் வாழ்கின்றன.
மேலும் இந்த எலிகள் புனிதமாக கருதப்படுவதால் பக்தர்கள் இந்த எலிகளிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் கால் பாதங்களில் இந்த எலிகளின் ஸ்பரிசம் படுவது நற்பேற்றின் அடையாளமாக நம்பப்படுகிறது.