மரயூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த தூவானம் அருவி அமைந்திருக்கிறது. இந்த அருவி சின்னார் சரணாலயத்திற்கு கிழக்கு பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் பாம்பார் நதியிலிருந்து உற்பத்தியாகிறது.
தூவானம் அருவியின் காடுகளில் பல்வேறு தாவரங்களையும், விலங்கினங்களையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அதோடு தூவானம் அருவியிலிருந்து கரிமுட்டி காட்டுப்பகுதிகள் வரை நடைபயணம் செல்லும் அனுபவம் மிகவும் அலாதியானது. இதன் காரணமாகவே இங்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications