தேன்கனல் நகரத்திலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சாரங்கா, சமயஞ்சார்ந்த முக்கியத்துவத்தை பெற்ற இடமாகும். சாரங்காவில் ஓடும் பிராமணி ஆற்றுப்படுகையில் உள்ள பாறையில் விஷ்ணு பகவானின் அனந்த்ஸ்யி (நாகம்) ஓவியத்தை காணலாம்.
இது புராண ராஜ நாகம் படம் எடுத்த நிலையில் உள்ள படமாகும். இந்த நாகம் படம் எடுத்த நிலையில் விஷ்ணு பகவானை பாதுகாத்த நிலையில் அவரின் மகுடத்தை போல் காட்சி அளிக்கும்.
இந்த ஓவியத்தில் ஒரு தாமரையையும் காணலாம். இந்த அண்டத்தை உருவாக்கிய பிரம்மா இந்த தாமரை மீது தான் வீற்றிருப்பார். இந்த தாமரை விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வருமாறு வரையப்பட்டுள்ளது.
இந்த பிராமணி ஆற்றுப்படுகையில் பாறையின் மீது விஷ்ணு பகவான் ஆழ்ந்த நித்திரையில் உள்ளதை போல் இந்த ஓவியம் சித்தரிக்கும். இந்த ஓவியத்தை காணவே இந்த இடத்திற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவதுண்டு.



Click it and Unblock the Notifications