திமாபூர் அருகில் இருக்கும் பழங்கலாம கிராமமான சும்முகெடிமா குன்றுகளில் அமைந்திருக்கும் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் இப்பகுதிக்கு அழகு சேர்க்கின்றன.
திமாபூரில் இருந்து 14கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சும்முகெடிமா கிராமம் நாகா குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நாகா ஹில்ஸ் மாவட்டத்தின் தலைமையிடமான இக்கிராமம் விளங்கியது.
நாகாலாந்து சுற்றுலாத் துறை இப்பகுதியில் பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு திமாபூர் மற்றும் கர்பி-அங்லாங்க் மாவட்டத்தின் சில பகுதிகள் முழுதும் தெரியும் வகையில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 8 கிமீ தொலைவில் குன்றின் உச்சியில் ஒரு சுற்றுலா கிராமத்தை அமைத்துள்ளது.
மேலும் கடந்த 20வருடங்களில் ஐந்து மடங்கு வேகமாக வளர்ந்திருக்கும் இப்பகுதியின் அசுர வளர்ச்சியை கவனத்தில் கொண்டு திமாபூர்-சும்முகெடிமா பகுதியை தனி நகரமாக அறிவிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.