ஒரு இடத்தின் உயிரியல் அம்சங்களைக் காணாவிடில் அப்பயணம் முழுமை பெறாது. வடகிழக்கு மாகாணங்களின் தாவர மற்றும் வனயியல் தொன்மைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் இப்பூங்கா விளங்குகிறது. இவ்விடம் புத்துணர்ச்சியளிக்கும் பூங்காவாகவும் விளங்குகிறது.
நகரத்தில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இப்பூங்கா 176 ஹெக்டேர் அல்லது 434.50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேட்டுப்பகுதியில் அமைந்துள்ள பூங்கா நீர்சார் பறவைகளுக்கு ஏற்றவாறு பள்ளங்களையும் ஆங்காங்கே கொண்டுள்ளது.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி மாநிலத்தின் இயற்கை வளத்தை பறைசாற்றுவதற்காக மாநில அரசு இப்பூங்காவைத் திறந்தது. இப்பூங்கா மாநிலத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த வடகிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு மையமாகவும் செயல்படுகிற