திமாபூர் மையப்பகுதியில் அமைந்திருக்கும் திமாபூர் ஏஓ பேப்டிஸ்ட் தேவாலயம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய இடமாகும். 5000 ஏ.ஓ கிறித்தவ குடும்பங்களுக்கு தேவாலயமாக விளங்கும் இவ்விடத்தில் 15000 பேர்களுக்கும் மேல் ஞானஸ்தானம் பெற்றிருப்பதால் இந்தியாவின் மிகப்பெரிய ஞானஸ்தான தேவாலயமாக விளங்குகிறது.
ஒரே நேரத்தில் 10000பேர் வரை அமரக்கூடிய வகையில் இந்த தேவாலயம் அமைந்திருக்கிறது. ஞாயிறு இறைச்சேவையின் போது கலாச்சார உடையில் மக்கள் பங்குகொள்வது கண்டிப்பாக பார்க்க வேண்டிய காட்சியாகும்.
அரை நூற்றாண்டு பழமையான இந்த தேவாலயத்தில் கட்டிடக்கலைக்காக புகழ்பெற்று விளங்குவதோடு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை உலகுக்கு உணர்த்துவதாகவும் இருக்கிறது.
1958ல் ஏழைகளுக்கு உதவி புரியவும், கடவுளின் செய்தியை மக்களுக்குப் பரப்பவும் ஆரம்பிக்கப்பட்டதே இந்த தேவாலயம். ஒவ்வொரு கிறித்துமஸ் விழாவின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த தேவாலயம் இன்னும் அழகுடன் விளங்குகிறது.



Click it and Unblock the Notifications