நாகாலாந்தின் உண்மையான அழகை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் திமாபூருக்கு வெளியே அமைந்திருக்கும் திபுபார் கிராமத்திற்கு கண்டிப்பாக செல்லவேண்டும். நகரின் மையப்பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கிராமத்தில் 16 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 14000பேர் வசிக்கிறார்கள்.
நாகாலாந்தின் அமைதியையும், மகிழ்ச்சியான சூழ்நிலையையும் உணர்த்தும் வண்ணம் அங்கமி, லோதா, சகெஹ்சங், சுமி, சங்டம், ஏஓ, ரெங்மா பொச்சுரி மற்றும் ஜிலியாங்க் இனக்குழுக்களைச் சேர்ந்த பலர் இங்கு இணைந்து வசிக்கிறார்கள்.
இந்த கிராமத்திற்குப் பயணப்படும் போது பலவகையான நாகாலாந்து பழங்குடிகளுக்குள் உணவு, உடை, மொழி, பழக்கவழக்கங்களில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ளலாம்.
நாகாலாந்து சார்ந்த நினைவுச்சின்னங்களை வாங்கிக் கொள்ள மறக்காதீர்கள். நாகாலாந்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல நேரமில்லாவிடினும் திபுபார் செல்வது அவசியம்.



Click it and Unblock the Notifications