கொடிவேரி அணை தமிழ் நாட்டின் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்றாகும். இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் கோபிசெட்டிபாளையத்தில் உள்ளது. ஈரோடு நகரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலேயே உள்ள இந்நகரம் அதனுடைய கோவில்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மைசூர் மகாராஜா 17-வது நூற்றாண்டில் இந்த அணையைக் கட்டினார். நெல்லும் கரும்பும் இங்கு விளையும் முக்கிய பயர் வகைகளாகும். மிகப்பெரிய பரப்பளவில் அழகுற நிற்கும் இந்த அணைதான் இந்தப் பகுதி மொத்தமுமே வளமாக இருப்பதற்கு காரணமாகும்.
இந்தப் பகுதியின் நீர்ப்பாசனத்திற்கு கொடிவேரி அணை மகத்தான பங்கினை ஆற்றி வருகிறது. கழிப்பிட வசதிகளுடன் கூடிய குழந்தைகளுக்கான சிறப்பு பூங்காக்களை அரசு இங்கு ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவ்வப்போது சில நடவடிக்கைகளை எடுத்து இந்த அணைக்கட்டின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.