கோடாக்புரா நகரம் அதன் நிறுவனர் நவாப் கபுரா சிங் கின் பெயரால் அழைக்கபடுகின்றது. இங்குள்ள பெரிய பருத்தி சந்தை உலகிலேயே மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.
மேலும் இந்த நகரம் இங்குள்ள பருத்தி சந்தையின் காரணமாக 'வெள்ளை தங்கம் நகரம்' என நன்கு அறியப்படுகிறது. இங்கு மிகவும் நெரிசலான சாஸ்திரி சந்தை அல்லது மகேஸ்வேரி தெரு உள்ளது.
இது 1875-ம் ஆண்டில் மகேஸ்வேரி குடும்பத்தாரால் நிறுவப்பட்டது. இந்த நகரத்தில் உள்ள பழமையான கோட்டைகள் இந்த நகரத்தின் தொன்மை வாய்ந்த வரலாற்றை பிரதிபலிக்கின்றது.
எனவே இந்த நகரம் வரலாற்றில் ஆர்வம் உள்ள மக்களுக்கான சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது. குரு ஹர் கோபிந்த் சிங் ஜி மற்றும் நவாட் கபுரா சிங்கின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் தஙக்ளுடைய வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் இந்த நகரத்திற்கு சுற்றுலா செல்ல வேண்டும்.
இங்குள்ள துர்கா மந்திர், குருத்வாரா கோதாவரி சார் பட்ஸ்ஹஹி, சிவ குஃபா மந்திர் மற்றும் ஸ்ரீ ராதா கிருஷ்ணா மந்திர் போன்ற பல்வேறு ஆன்மீக சுற்றுலாத் தலங்கள் பயணிகளை பெரிதும் கவர்கின்றன.
இதைத் தவிர இங்கு கோதே தி வேலே, ஸ்ந்த்வான், தில்வான் காலன், பஞ்க்ரையன் காலன், கானேயன் வாலா, ஹரி நேஉ, மட்ஹக், க்ஹரா மற்றும் மட்டா போன்ற பிரபல சுற்றுலாத் தலங்களும் முக்கியமானவை.