இபாதத் கானா என்றழைக்கப்படும், அக்பரால் கட்டப்பட்ட வழிபாட்டுத் தளம் ஃபதேபூர் சிக்ரியில் உள்ள அவரது அரண்மனையில் உள்ளது. ஆரம்பத்தில் சன்னி இஸ்லாமியர்களின் வழிபாட்டிற்காக மட்டும் திறந்த இவ்விடம், பின் ஏற்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கும் பொருட்டு அனைத்து நம்பிக்கையாளர்களுக்காகவும் திறக்கப்பட்டது.
உள்ளூர் வாசிகளும், வெளியூர்காரர்களும் இங்கு நடைபெற்ற பல்வேறு விவாதங்களிலும், ஆலோசனைகளிலும் பங்கு கொள்வதற்கு அழைக்கப்பட்டார்கள். உள்நாட்டு, வெளிநாட்டு மதத் தலைவர்கள் மற்றும் தத்துவவியலாளர்கள் இங்கு வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்திப்புகளில் பங்குபெற ஊக்குவிக்கப்பட்டார்கள்.
மதத் தலைவர்கள் மற்றும் தத்துவ ஞானிகளிடையே அதிகமாகிக்கொண்டிருந்த வேறுபாடுகளையும், பிரச்சினைளையும் சமாளித்து ஒற்றுமையைக் கொண்டுவரும் பொருட்டு அக்பர் புனிதமானவர்களின் நம்பிக்கை என்றழைக்கப்பட்ட தீன்-இ-லாஹி என்ற மதத்தைத் தோற்றுவித்தார்.
பாராட்டப்படவேண்டிய முயற்சி என்றாலும் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் அக்பரின் தர்பாரில் இருந்த சில முக்கியஸ்தர்கள் இம்மதத்தைத் தழுவினார்கள்