அடலாஜ் படிக் கிணறு அல்லது அடலாஜ் வாவ் (குஜராத்தி) ஒரு தனித்தன்மை வாய்ந்த இந்து மதக் கிணறு ஆகும். இது தேசிய நெடுங்சாலையில், காந்திநகரில் இருந்து சுமார் 15 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்தப் படிக் கிணறு அதன் அற்புதமான கட்டமைப்பு மற்றும் சிக்கலான சிற்பங்களுக்காக நன்கு அறியப்படுகிறது. இந்தப் படிக்கிணறு 1499 ம் ஆண்டில் முஸ்லீம் அரசரான முகம்மது பேக்டாவால், வகேலாவின் தலைவரான வீர் சிங்கின் மனைவியான ராணி ரூதாபாய்க்காக கட்டப்பட்டது.
இந்த கிணறு அந்த கிராமவாசிகள் மத்தியில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர்கள் இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பவும், இங்கு செதுக்கப்பட்டுள்ள தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்வதற்காகவும் வருகை புரிகின்றனர். இங்குள்ள சுவர்களில் புராண பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிணறு இந்திய- இஸ்லாமிய கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பிற்கான ஒரு அழகிய சான்றாக இருக்கிறது. இதன் தனித்துவமான கட்டமைப்பின் காரணமாக நேரடி சூரிய ஒளி பொதுவாக, நண்பகலில் ஒரு குறுகிய காலத்தைத் தவிர, படிகளைத் தொடுவதில்லை.
எனவே இந்தக் கிணற்றின் உள்ளே உள்ள வெப்பநிலை சுற்றுப் புற வெப்பநிலையை விட குளிர்ந்து காணப்படுகிறது.