மஹாராஷ்டிராவின் கொங்கணப்பிரதேசத்தில் குஹாகர் நகரத்துக்கு அருகில் உள்ள சிறு கிராமம் இந்த ஹெத்வி ஆகும்.இங்குள்ள கணேசக்கடவுள் கோயிலுக்கும் மற்றும் ஷீ தசபுஜ லட்சுமிகணேச தேவஸ்தானத்துக்கும் இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது.
100 கரங்களை உடைய தசபுஜ கணேசக்கடவுளின் சிலையைக்கொண்டுள்ளதால் அந்த கோயில் இப்படி அழைக்கப்படுகிறது.பேஷ்வாக்களின் ஆட்சியின் போது இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கணேசக்கடவுளின் சிலைக்கான பளிங்குக்கல் ஜம்மு காஷ்மீரிலிருந்து தருவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.
ஹெத்வி கிராமத்தில் ஒரு உமாமஹேஸ்வரி கோயிலும் பிரம்மன் கால் என்றழைக்கப்படும் ஒரு இயற்கை அதிசய ஸ்தலமும் உள்ளது. 35 அடி நீளமும் 29 அடி ஆழமும் இந்த பிரம்மன் கால் என்பது ஒரு இயற்கையான கால்வாய் போன்ற பூமி வெடிப்பு ஆகும்.
கரும்பாறைகளால் உருவாகியிள்ள இந்த வெடிப்பு இரண்டடி அகலத்தில் காணப்படுகிறது. பிரமிப்பூட்டும் இயற்கை அதிசயமான இந்த வெடிப்புப்பகுதியில் அலையேற்ற நாட்களில் கடல் நீர் ஏறி வெண்ணிற நுரையுடன் ததும்பி சுருள்வதை கண்டு ரசிக்கலாம். வேறெங்குமே பார்க்க முடியாத ஒரு இயற்கை அதிசயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.